Thursday, April 17, 2008

குருவி- பாடல்கள்

ஒன்னு விஜய் சொல்லி இருக்கனும் இல்லாட்டி, தரணி சொல்லி இருக்கனும். என்னான்னு? ATMல குத்து பத்தலைன்னு ரசிகர்கள் புலம்பறாங்கன்னு, அதான் இந்தப் படத்துல எங்கே பார்த்தாலும் குத்து.

1. Happy New Year -சுனிதி செளகான், Dr Burn மற்றும் யோகி.பி
நல்ல குத்துபாட்ட எப்படி கெடுக்கனும்னு யோகி குழுகிட்டே கேட்டு தெரிஞ்சிக்கனும். அருமையா பாடி இருக்காங்க சுனிதி. கரகாட்டகாரன் பாட்டுக்கு ஈடா வர வேண்டியது, அவசரத்துல பாடி இதையும் கெடுத்து வெச்சுட்டாரு. மாத்துய்யா, கடுப்படிக்குது. Puuru puurru..., Superb ..இது ஒரு ஐட்டம் பாட்டா இருக்கும் போல, ஆனாலும் இனிமே புது வருசத்துல தெருவுல ஆட்டம் போட இந்தப் பாட்டு இருக்கும். என்னமோ, புதுசா கேட்குற மாதிரியே இல்லீங்க.

தாநா தாநான்னன்னே.. சுனிதி மனசுல இருக்காங்கப்பா...

2. டண்டாண்ணா டர்ன்னா-சங்கீத் ஹல்திப்பூர்(மராத்திய பாடகர்/இசையமைப்பாளர்)

டாக்டர் விஜய்யின் அறிமுகப்பாடல், வழக்கம் போல குத்து, குத்து, குத்து, குத்து, குத்து, குத்து, குத்து, குத்து, குத்து, குத்து, குத்து.



  • என் சாப்பாட்டுக்கு உப்புக்கல் நீயடா..
  • அத்தனைக்குமேல நாம அண்ணன், தம்பிடா.
  • என் வீட்டுக்கு செங்கல்லும் நீயடா

இப்படி வரிகள் வெச்சு அடுத்த சூப்பர் ஸ்டார்ன்னு நிலை நாட்டி இருக்காருங்க. திருப்பாச்சில இருந்து அறிமுகப்பாட்டு இப்படித்தான் ஒரே மாதிரியே இருக்கு. என்னமோ, புதுசா கேட்குற மாதிரியே இல்லீங்க.

3. மொழ மொழன்னு - பாடினது கேகே மற்றும் அனுராதா ஸ்ரீராம்.

ஐய், இப்பவே தெரிஞ்சிருக்குமே, அப்படிப்போடு-கில்லி ஹிட் ஆனதுக்கப்புறம் அனுராதா வந்து விஜய்க்குன்னு ஒரு குத்துப்பாட்டு பாடுவாங்க. இதுவும் அதே மாதிரிதான். புஷ்பவனம் குப்புசாமி பாடி இருந்தா இன்னும் கலக்கலா இருந்து இருக்கலாம். நாட்டுபுற பாடல் வரிகளோட கேட்க ஒரு மாதிரி நல்லாத்தான் இருக்கு. என்னமோ, புதுசா கேட்குற மாதிரியே இல்லீங்க.


4. பலானது பலானது -வித்யாசாகர், ராஜலட்சுமி.

வித்யாசாகர் அண்ணா, ஹிமேஸ் தமிழுக்கு வந்துட்டாரு தெரியுமா? ஹிமேஷ் ரேஸ்மயா குரல் மாதிரியே இருக்கு விதயாசாகர் குரல், நல்லா இருக்கு.

ஏக் பார் ஆஜா பாட்டு இசைய உருவினாப்ல இருக்குங்களே. அதுவும் ஹிந்தி வார்த்தை அதிகம் வெச்சு, இசை ஆர்ப்பாட்டம்.. DJ பாட்டுக்கு ஏத்தப்பாட்டு. கலக்கல் ஆனாலும் என்னமோ, புதுசா கேட்குற மாதிரியே இல்லீங்க.

5. Theme Music - Praveen Mani,Dr Burn,Renina,Suvi.

பாபா படத்துல ஆரம்பிச்சது இந்த மாதிரி ஒரு ட்ரெண்டு. அதாவது ஆங்கில வரிகளை வெச்சு ஒரு பாட்டும். அதுல blaze கலக்கலா இருந்துச்சு. இதுல யோகி. மத்தபடி வித்தியாசம் இல்லீங்கண்ணா, எங்காவது சண்டையில ஒத்த ஆளா விஜய் 100 பேர அடிக்கும்போது இந்த பாட்டு(?!) வரலாம். குருவி அடிச்சா.. டேய் சப்பை.. அடிச்சா நொங்கு இப்படி எல்லாம் வரி வருதே.. சிவாஜி வந்து ரொம்ப நாள் ஆச்சுன்னு முடிவு பண்ணிட்டாங்க போல. மலேசியா பாஷை வருதுங்களே, யோகி மறந்தாப்ல பாடிட்டீங்களா? electric Guitarல விளையாடி இருக்காரு, hatsoff வித்யாசாகர். உருமிய உபயோகிய விதமும் அருமை.

6. தேன் தேன் - உதித் நாராயண், ஷ்ரேயா கோஷல்.

படத்துக்கும், மனசுக்கும் இதமான பாடல்னா இது ஒன்னுதான். நல்லா இருக்கு, நல்லா இருக்கு. உதித் நாராயணனின் மழலை உச்சரிப்பு(?!) நல்லா இருக்கு. ஷ்ரேயாவைப் பத்தி சொல்லவே வேணாம், செம செம செம... ரசித்தேன் ரசித்தேன்ன்னு முடியுது வரிகள் எல்லாம். நல்லாவே நானும் ரசித்தேன் :)

ஆக மொத்தத்துல பாடல்களை வெச்சுப் பார்த்தா இது பொது மக்கள் பார்க்குற படம் மாதிரியே இல்லை. விஜய்யின் ரசிகர்கள் திருப்தி படுத்துற படம் மாதிரியே இருக்கு. ஒரு வேளை விஜய்க்கு தமிழ் மக்கள் எல்லாம் ரசிகர்களா இருப்பாங்கன்னு தரணி நினைச்சு இருப்பாரோ.

கீத்துக்கொட்டாயின் மதிப்பீடு- 2.5/5(அதாவது சுமார், ரொம்ப சுமார்)

Sunday, April 13, 2008

Jalsa Movie Review

மகேஷ் பாபு நடித்த மாபெரும் வெற்றி படமான "அத்தடு"வை (தமிழில் நந்து) இயக்கிய திருவிக்ரம் இயக்கியிருக்கும் படம் "ஜல்சா". தொடர் தோல்விகளால் பின்னுக்கு தள்ளப்பட்டிருந்த "பவர் ஸ்டார்" பவன் கல்யாண் மீண்டும் வெற்றி நாயகனாக அதிகம் எதிர்பார்ப்புக்குள்ளான படம். பவன் கல்யாணை திருவிக்ரம் ஏமாற்றவில்லை. படம் சூப்பர் டூப்பர் ஹிட். முதல் நாளில் 10 கோடி ரூபாய் கலெக்ஷன். ஒரு வாரத்தில் 21 கோடி கலெக்ஷன்.



படம் பார்த்தா அனுபவிக்கனும், ஆராயக்கூடாதுனு முடிவோட போனீங்கனா ரெண்டரை மணி நேரம் போறதே தெரியாது. அவ்வளவு எண்டர்டெயின்மெண்ட். பவன் சும்மா புகுந்து விளையாடிருக்காரு. டயலாக் டெலிவெரி எல்லாம் சூப்பர். அடுத்து படத்துக்கு முக்கியமானவங்க இலியானா. அவருக்கு குடுத்த காசுக்கு ஒரு ரூபாய் கூட மிச்சம் வைக்காம வேலை வாங்கிய டைரக்டரை பாராட்டியே ஆகனும். படத்துக்கு ரெண்டாவது தடவை போறவங்க எல்லாம் இலியானாவாக்காக தான் போறாங்கனு மக்கள் பேசிக்கறாங்க. (நான் முதல் தடவையே அதுக்காகத்தான் போனேனு எல்லாம் இங்க சொல்ல மாட்டேன்). பார்வதி மில்டனும் சூப்பரா இருக்காங்க. அவுங்களையும் சரியா பயன்படத்திருக்கலாம்.


படம் முழுக்க காமெடி. முதல் சீன்ல இருந்து க்ளைமாக்ஸ் வரைக்கும் எல்லா டயலாக்மே காமெடி தான். ஆனா அதுக்காக கொஞ்சம் சீரியசா சொல்ல வேண்டிய நக்சல்பாரிகளின் வாழ்க்கையை ரொம்ப சாதாரணமா சொல்லிட்டார். அதுவுமில்லாம பவன் கல்யாண் வீட்ல, பாட்டுல எல்லா இடத்துலயும் சேகுவாரா படம் வேற. அதை பார்த்து நம்ம ஆளுங்க ஏதாவது பாப் சிங்கர்னு நினைச்சிக்காம இருந்தா சரி தான்.

படத்துல அங்க அங்க மகேஷ் பாபு பேசியிருக்காரு. சூப்பர். அதே மாதிரி விஜய் படத்துல அஜித்தோ இல்லை அஜித் படத்துல விஜயோ பேசற நாள் எப்ப வருமோ?

இந்நேரம் இந்த படத்தை விஜய் புக் பண்ணியிருக்கலாம். அவருக்கு இந்த ரோல் அப்படியே பொருந்தும். Ctrl-C, Ctrl-V பண்ணிடலாம்.

சரி இனிமே கதை... படம் பார்க்கனும்னு ஆசைப்படறவங்க இதுக்கு மேல படிக்காதீங்க.



படத்துல கதை எல்லாம் இருக்குனு நினைச்சிட்டு இதை படிச்சிங்கனா நீங்க ரொம்ப பாவம் ;)... நான் படத்துல ரசிச்ச காட்சிகளை மட்டும் சொல்லிடறேன்.

* கமலினி முக்கர்ஜியை பொண்ணு கேட்டு பவன் பிரகாஷ் ராஜை பார்க்க போற காட்சி அசத்தல். அதுக்கு அப்பறம் அவர் கல்யாணத்துக்கு போய் "சாப்பாடு சூப்பரா இருக்குனு வெளிய பேசிக்கிட்டாங்க. அதான் வந்தோம்னு சொல்லிட்டு, போட்டோக்கு அவர் பக்கத்துல நின்னு போஸ் கொடுக்கறது இன்னும் சூப்பர்.


*இலியானாக்கு அந்த லூஸ் மாதிரி கேரக்டர் சூப்பர். பவனை சுத்தி சுத்தி காதலிக்கறாங்க.

*இலியானா கமலினி தங்கச்சினு தெரிஞ்சதுக்கப்பறம் அவுங்க நினைச்சி பாக்கற அந்த சீக்குவன்ஸ் சூப்பர். இந்த அக்காவோட பழைய புக், அக்காவோட பழைய சைக்கிள்னு சொல்லிட்டு கடைசியா இந்த அக்காவோட பாய் ஃபிரெண்ட்னு சொல்ற சீன்ல தியேட்டரே அதிருது.



*பிரகாஷ் ராஜ் பிளாஷ் பேக் அட்டகாசம். பிரகாஷ் ராஜ் போலிஸ் அதிகாரி. பவன் பிளாஷ் பேக்ல நக்சல்பாரி. போலிஸுக்கும் நக்சர்பாரிக்கும் நடக்கற சண்டைல இவுங்க ரெண்டு பேர் தவிர எல்லாரும் செத்துடறாங்க. முதல்ல பிரகாஷ்ராஜ் கைல மட்டும் துப்பாக்கி இருக்கு, அவர் பவனை மிரட்டறாரு. கொஞ்ச நேரத்துல துப்பாக்கி கை மாறிடுது. அப்பறம் அந்த பக்கம் வர மந்திரியை பவன் காப்பத்தறாரு. (குண்டு வெச்சதே அவுங்க தான்). பிரகாஷ்ராஜ் மந்திரிக்கிட்ட கெட்ட பேர் வாங்கிடறாரு. பவன் திருந்திடறார். அதனால பவனுக்கு சன்மானம். பிரகாஷ்ராஜுக்கு வனவாசம் (காட்டு இலாகா). பவனோட ஹைத்ரபாத் வாழ்க்கையையும் இவரோட காட்டு வாழ்க்கையையும் கம்பேர் பண்ற சீன் அருமை.



*க்ளைமாக்ஸ் சண்டை முடியும் போது கத்தியை தரைல அழுத்திட்டு இதுக்கு என்ன காரணம்? ரோடு போடற காண்ட்ராக்டர் சரியா போடலைனு சொல்றது சூப்பர். அதுக்கு பிறகு பேராலிஸில் அட்டாக்கான வில்லன் தினமும் வந்து அந்த கத்தியை பார்க்கறதும், அதையும் ஒரு நாள் பவன் அழுத்தறதும் சூப்பர். அதுக்கு பிறகு அடுத்து ரோட் போடற காண்ட்ராக்டர் சரியா போடறாருனு மகேஷ் பாபு சொல்ற சீனும் சூப்பர்.

*பிரமானந்த், சுனில் ரெண்டு பேர் சீக்வன்சும் சூப்பர்...

மொத்தத்தில் படம் ஹைதரபாத் பிரியாணி. மசாலா பிடிக்கறவங்களுக்கு தாராளமா பிடிக்கும். Don't Miss it..

Great Come back Pawan...